திடீர் மரண விசாரணை அலுவலராக மருதமுனை பஹட்ஸமான் நியமனம்.

1979இன் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை சட்டத்தின் 108ஆம் பிரிவின் மூலம் கௌரவ நீதி அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தர திடீர் மரண விசாரணை அலுவலகராக கௌரவ நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
விஜயதாச ராஜபக்ச அவர்களிடமிருந்து இன்று (13) கொழும்பில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வைத்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்

மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர்
4G handloom pvt நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார் இவருக்கு 2024.05.15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வரும் வகையில் திடீர் மரண விசாரணை அதிகாரி / அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
